பாடசாலை பயிற்சி புத்தகங்களுக்கான வற் வரி குறைப்பு!

Date:

எதிர்காலத்தில் பெறுமதி சேர் வரியை (VAT) குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது.

அதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச வருமானத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வற் வரியானது 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இதன் விளைவாக அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 11 சதவீதமாக உயர்ந்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

வற் வரி விதிப்பால் அரசின் வருமானம் வலுப்பெற்றது. கடனை அடைக்க எம்மிடம் திறன் உள்ளது என்பது சர்வதேச சமூகத்தின் முன் உறுதிபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்களை வற் வரியிலிருந்து நீக்குவதற்கு தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் இன்று தெரிவித்தார்.

மேலும் வற் வரியில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதற்கும் நம்புவதாக அவர் கூறினார்.

 ரணில் விக்ரமசிங்கவின் இந்த அறிவிப்பானது எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்ட ஜனாதிபதியின் வியூகமாக இருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...