துருக்கியில் படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு!

Date:

துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏராளமான அகதிகளிடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கடலில் மூழ்கியபோது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டதுடன் மேலும் 2 போ் நீந்திக் கரை சோ்ந்தனா்.

இந்த விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகொப்டா்கள், ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...