நாட்டில் முன்னேற்றங்கள் உள்ள போதிலும் இன்னமும் இலங்கை பொருளாதார அபாயத்திலேயே உள்ளது: ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தகவல்

Date:

அண்மைக்காலமாக சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும் இன்னமும் இலங்கையின் பொருளாதார அபாயத்திலேயே உள்ளது என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (Oxford

Economics) தெரிவித்துள்ளது.இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கொவிட் தொற்றுக்கு முந்தைய போக்கை விட சுமார் 25% குறைவாக உள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டதாலேயே இன்னமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமான நிலையில் உள்ளது.

இலங்கை பற்றிய அவர்களின் சமீபத்திய கணிப்புகளின்படி, இலங்கையில் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை பலனைத் தரத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் இன்னும் கணிசமான அக்கறை தேவை என்றும் ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கூறுகிறது.

எவ்வாறாயினும், சுற்றுலாத்துறை மீண்டு வருவதால், பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிய நடவடிக்கைகளில் பாய்ச்சல்கள் உள்ளன.

பற்றாக்குறையை குறைக்கும் அதே வேளையில் சேவைகள் செயல்பாடுகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

Oxford Economics, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை எட்டும் என்றும் 2024 இல் 1.5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறது என்றும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...