முஸ்லிம்களின் ஐக்கியத்துக்காகப் பாடுபட்ட இப்ராஹிம் மௌலவியின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை பங்கேற்பு!

Date:

முஸ்லிம் உலமாக்களின் ஒற்றுமைக்காக இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை உருவாக்கியும் பின்னர் ஐக்கியப் பேரவை ஒன்றைத் தாபிப்பதில் பெரு முயற்சியும் எடுத்த மௌலவி இப்ராஹிம் அவர்களின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களான அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் முஜீப் கபூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அகில இலங்கை சூபி ஆன்மீக பேரவையின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல்லாஹ் நூரி ஸுபி காதிரி உட்பட பல அங்கத்துவ அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒருவரின் இறுதித் தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தற்போது அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவை சார்பில் தரீக்காவின் அங்கத்தவர்கள் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டது அன்னார் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறுவதைக் காட்டக் கூடியதாக உள்ளதாக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் அங்கத்தவர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரின் ஜனாஸாவில் கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள் ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹியைச் சந்தித்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...