இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு!

Date:

இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக உழைக்கின்ற இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸில் இன்று இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இப்தார் நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் உட்பட ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இவர்களோடு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸின் மசூறா சபை அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் முஸ்லிம் சமய கயலாசார தினைக்களம், ஸ்ரீலங்கா ஹஜ் கமிட்டி, வக்பு சபை, தரீக்காக்களின் சுப்ரிம் கவுன்சில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை சூபி ஆன்மிக பேரவை, அகில இலங்கை தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்காக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் தப்லிக் ஜமாஅத் சூறா சபைக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...