வான் தாக்குதலில் காசாவில் தன்னார்வத் தொண்டாளர்கள் பலி!

Date:

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் உணவு வழங்கலில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தொண்டாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா, பிரித்தானியா,போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்டவர்களில் கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை 100 தொன் கிலோ கிராம் எடையுடைய உணவுப் பொருட்களை காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலானது மனிதாபிமான தொண்டு நிறுவனத்திற்கு எதிரான தாக்குதலாக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது.

அத்தியவசிய உணவுப் பொருட்கள், யுத்த களத்தில் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித ரமழான் மாதம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மேற்கு நாடுகள் காசாவில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன.இருந்த போதிலும் யுத்த மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...