பண்டிகை காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 உணவுப் பொருட்களின் விலையை நேற்று (2) முதல் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 550 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாவினாலும், 320 ரூபாவாக இருந்த சின்ன வெங்காயம் 30 ரூபாவினாலும், 510 ரூபாவாக இருந்த கடலைப்பருப்பு கிலோ 16 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 16 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

935 ரூபாவாக இருந்த 400 கிராம் LSL பால் மா பாக்கெட் 10 ரூபாவாலும் 200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா 8 ரூபாவினாலும், 43 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 195 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 3 ரூபாவினாலும், 595 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோயா மிட் விலை 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...