வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவின்றி நாட்டை முன்னேற்ற முடியாது: அனுர

Date:

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்.

அதேநேரம் அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் நாம் பயணிக்கும் போதே இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.

எனவே, எமக்கான ஆதரவை அனைவரும் ஒருமித்து வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் அரசாங்கம் அமைக்கப்படும்போது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி நடைபெறும்.

இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள முடியும்.

இந்த பயணத்தில், அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு நான் தமிழ் தலைவர்களிடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...