மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்!

Date:

மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் பாதிழ் ஹிஷாம் பின் ஆதம் அவர்கள் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை (05) சினேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

பெரிய பள்ளியின் கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் பழைமை வாய்ந்த மணிக்கூடு போன்றவற்றை பார்வையிட்டதோடு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சட்டத்தரணி இக்பால் உட்பட பெரிய பள்ளியின் நிர்வாகிகளும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் மற்றும் புத்தளம் வர்த்தக சங்க தலைவர் வை.எம்.நிஸ்தார் உட்பட இன்னும் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர்,

தன்னுடைய புத்தளத்துக்கான இவ்விஜயம் இத்துடன் நிறைவுபெறும் ஒன்றல்ல.

புத்தளத்துக்கும் மலேஷியாவுக்கும் இடையில் வர்த்தக பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை ஆரம்பிப்பதும் ஏற்றுமதி வர்த்தகத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊக்குவிப்பதும் தன்னுடைய நோக்கமாகும்.

தொடர்ந்தும் புத்தளத்துக்கான எனது விஜயம் தொடரும் என கூறியதோடு, பள்ளியின் அபிவிருத்தி தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது மலேஷியா அரசாங்கம் ஊடாக தன்னால் முடியுமான உதவிகளை செய்ய முடியும் என்றும் கூறினார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...