பண்டிகையின் போது கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடு!

Date:

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க விசேட ஏற்பாடு செய்யப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

சிறையில் உள்ள இஸ்லாமிய மத கைதிகளை ரமழான் பண்டிகை தினமான 11ம் திகதி உறவினர்கள் சந்திக்க முடியும். 12, 13 ஆம் திகதிகளில் ஏனைய கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும்.

தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு உறவினர்கள் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...