ஈத் அல்-பித்ர் திருநாள் மன்னிப்பு, அன்பு மற்றும் இரக்கத்திற்கான நாளாகும்: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Date:

அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈத் அல்-பித்ர் திருநாள் என்பது மன்னிப்பு, அன்பு மற்றும் இரக்கத்திற்கான நாளாகும். இக்குணாதிசயங்கள்தான் இஸ்லாத்தின் அடிப்படை.

ஈத் என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் நாள் அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சமாதானம் பேணவேண்டிய நாள்.

இந்த மங்களகரமான சந்தர்ப்பம், உறவுமுறை, சமாதானம் ஆகியவற்றின் பிணைப்பை புத்துயிர் பெறச்செய்வதற்கும், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

இந்த நன்நாள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...