தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய தேசப்பிரிய!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது இல்லத்திற்கு முன்பாக அவர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் அவரது இல்லத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலை தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரத்துக்குச் சமமானது. அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர்த்து அதிகாரிகள் ஆட்சி புரிவது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...