புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் “மக்கள் மேடை”!

Date:

புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான “மக்கள் மேடை” இன்று வியாழக்கிழமை (18) காலை புத்தளம் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு “தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில். இடம்பெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ருமைஸ் தலைமையில், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் (IRES) நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜனாயக்க அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயலாளர் முஹம்மது நௌபல், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவின் புத்தளம் தொகுதி இணைப்பாளர், சமய தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசியல் பிரமுகர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உரைகளை தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

(எம்.யூ.எம்.சனூன்)

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...