புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் “மக்கள் மேடை”!

Date:

புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான “மக்கள் மேடை” இன்று வியாழக்கிழமை (18) காலை புத்தளம் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு “தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில். இடம்பெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ருமைஸ் தலைமையில், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் (IRES) நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜனாயக்க அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயலாளர் முஹம்மது நௌபல், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவின் புத்தளம் தொகுதி இணைப்பாளர், சமய தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசியல் பிரமுகர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உரைகளை தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

(எம்.யூ.எம்.சனூன்)

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...