ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்: கழுகுப் பார்வையில் உலக நாடுகள்

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன் தலைநகரை இன்று காலை வந்தடைந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோர் பிரதமர் இல்லத்தில் சந்திப்பார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தான் நிலவரங்கள் மற்றும் பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...