கல்முனை கல்வி வலயத்தால், காசா மக்களுக்கு 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை கையளிப்பு

Date:

கல்முனை வலயக் கல்வி அலுவலகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

அதற்கமைய பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐந்நூறு ரூபா இன்று (22) கையளித்துள்ளது.

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் குறித்த காசோலையினை கையளித்துள்ளார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார் மற்றும் கல்விசார ஊழியர்கள், அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய வருடாந்தம் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலில் 34,049 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 76,901 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...