கல்முனை கல்வி வலயத்தால், காசா மக்களுக்கு 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை கையளிப்பு

Date:

கல்முனை வலயக் கல்வி அலுவலகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

அதற்கமைய பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐந்நூறு ரூபா இன்று (22) கையளித்துள்ளது.

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் குறித்த காசோலையினை கையளித்துள்ளார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார் மற்றும் கல்விசார ஊழியர்கள், அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய வருடாந்தம் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலில் 34,049 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 76,901 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...