மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டும் கனமழை: துபாய், ஓமனை தொடர்ந்து சவூதியிலும் தொடரும் மழை! !

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் சமீப நாட்களில் கனமழை கொட்டி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் கன மழை பெய்த நிலையில், நேற்று சவுதி அரேபியாவில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்தது.

புனித நகரான மதினாவில் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஒரு மசூதியின் மேற்கூரையிலிருந்து மழை நீர் அருவி போல் கொட்டியது. ரியாத் உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மழை தொடரும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

“மே 1 ஆம் திகதி பஹ்ரைனிலும், மே 2 ஆம் திகதி அபுதாபி, துபாய், ஷார்ஜாவிலும் மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...