இலங்கையும் சவூதியும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Date:

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்களும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்குபற்றி உள்ளார்.

இதன்போது சவூதி அரேபிய முதலீடுகள் அமைச்சர் காலித் அல் பாலிஹ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நாள் தேவையாக இருந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இலங்கையின் தொழில் வல்லுனர்களையும் துறைசார் வல்லுனர்களையும் அமைச்சர் அலி சப்ரி  சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹன ஊடக நிறுவனத்தின் தலைவரான ஸெய்யித் சாலிம் மௌலானா அவர்களும்  கலந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...