2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீள் திருத்தத்திற்கு 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்ததாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.