இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய வானிலை அறிகுறிகள் உருவாகி வருவதால் மழை மற்றும் காற்று நிலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.