கொழும்பு விமான கண்காட்சி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

Date:

கொழும்பு விமான கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி (CADE 2024) மே 29 முதல் ஜூன் 2 வரை காலி முகத்திடல் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட CADE, சர்வதேச பங்காளிகள் மற்றும் பாதுகாப்பு துறை பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விமானப்படைகளின் பல கோரிக்கைகளின் காரணமாக, அவர்களின் பங்கேற்பிற்கான அதிக வாய்ப்புகளுக்கு இடமளிப்பதற்கும் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்குவதற்கும் மீண்டும் திட்டமிடப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு 2025 பெப்ரவரி 26 முதல் மார்ச் 02 வரை நடைபெறும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...