ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

Date:

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்ட குழுவினரின் மரணம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரின் மலைப்பகுதியில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேலும் ஈரானின் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...