ஈரான் ஜனாதிபதியின் இறுதி கிரியைகள் இன்று

Date:

ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி,வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலும் இன்று (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...