ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்குகள் ஆரம்பம்!

Date:

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த 7 பேரின் இறுதி சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.

அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் (tabris) நகரில் நடைபெறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியது.

மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் தப்ரிஸ் வீதிகளில் குவிந்துள்ளனர்.

இப்ராஹிம் ரைசியின் பூதவுடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...