ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்குகள் ஆரம்பம்!

Date:

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த 7 பேரின் இறுதி சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.

அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் (tabris) நகரில் நடைபெறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியது.

மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் தப்ரிஸ் வீதிகளில் குவிந்துள்ளனர்.

இப்ராஹிம் ரைசியின் பூதவுடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...