தொலைப்பேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம்

Date:

பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர்  கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று  ஆய்வொன்றை நடத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சமூக நிபுணர் வைத்தியர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதில் பல சிறுவர்கள்  இரவில் சரியாகத் தூங்காமல் எப்போதும் சோர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,  தொலைப்பேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டாய தேவை கருதி தொலைப்பேசி பாவிக்க வேண்டிய தேவை ஏற்படுமாயின் எந்தவொரு சிறுவர்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தொலைப்பேசி பாவிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களை வைத்தியர்கள்  கேட்டுக்கொண்டுள்ளனர் .

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...