‘ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன; சமாளிக்க தயாராக இருங்கள்’ ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை

Date:

இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் சர்வதேச தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்று நஸ்ரல்லா  குற்றம் சாட்டினார்.

ஹமாஸ்- இஸ்ரேல் போர் 8வது மாதமாக நீடிக்கும் நிலையில், லெபனானைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்ப்பு மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, “எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு (இஸ்ரேல்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. சமாளிக்க தயாராக இருங்கள்” என எச்சரித்தார்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நஸ்ரல்லா பட்டியலிட்டார். பல ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன அங்கீகரித்திருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு என்று அவர் கூறினார்.

இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் சர்வதேச தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்றும், ரபா மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதாகவும் நஸ்ரல்லா குற்றம் சாட்டினார்.

ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா, பாலஸ்தீனிய பிரச்சினை மற்றும் காசா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போரிடுகிறது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...