நான்கு இலங்கையர்களுக்கும் ISISஉடன் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் இல்லை: பொலிஸார் கைவிரிப்பு

Date:

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்தியாவின் அகமதாபாத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ATS) மே 20 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நுஷ்ரான், மொஹமட் நஃப்ரான் நவ்ஃபர், மொஹமட் ரஸ்டீன் அப்துல் ரசீம் மற்றும் மொஹமட் பாரிஸ் மொஹமட் ஃபாரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே ரஸ்தீன் மற்றும் பாரிஸ் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான அப்துல் ஹமீட் அமீர் என்பவரும் விசாரணைக்காக  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மே 21 அன்று ஃபாரிஸ் மற்றும் அமீரின் வீடுகளில்  சோதனைகளை நடத்திய போதிலும், குறிப்பிடத்தக்க அல்லது சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதேபோல், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளும் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உடனான தொடர்புகளின் எந்த முடிவையும் தரவில்லை.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று உள்ளூர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...