பலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்படும்: பிரான்ஸ் ஜனாதிபதி

Date:

பலஸ்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தத் தடையும் இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். உணர்ச்சி வசப்பட்டு இந்த முடிவை எடுப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் கூறியுள்ளார்.

அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனியரசாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்த நாளில் ஜனாதிபதி மக்ரோன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் ரபாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, “ரஃபாவின் காட்சிகளைக் கண்டு நானும் மிகவும் வருத்தமடைகிறேன். இதற்கான பதில் நடவடிக்கை அரசியல் ரீதியானதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பலஸ்தீன காசா நிலவரம் நாடாளுமன்ற கீழ்ச் சபையாகிய தேசிய சட்ட மன்றத்தில் பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதங்களுக்கு இடையில் தீவிர இடதுசாரி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் திடீரென எழுந்து நின்று பலஸ்தீனக் கொடியைக் காட்டினார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

கொடியை தூக்கிப் பிடித்த அமைச்சரை தேசிய சட்ட மன்றத்தின் உள் விதிகளுக்கு அமைய 15 நாட்களுக்கு சபையில் இருந்து இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்ற சம்பளத் தொகையில் பாதியை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...