கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 3200 பேர் பாதிப்பு!

Date:

மத்திய மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில்  700 குடும்பங்களைச் சேர்ந்த 3200 பேர்  வரை பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மத்திய மலையகத்தில் கடும் மழை பெய்து வருவதால் கண்டி மாவட்டத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக  மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்  650 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளில் ஆபத்தான  நிலையில் 4000  மரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை  அகற்றுவதற்கு பிரதேச செயலகங்களுடன்  இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்’

கண்டி மாவட்டத்தில் கங்க இஹலபோரலய, கங்க வட்டகோரலய, உடுநுவரை, யட்டிநுவரை, உடதும்பறை, பாத்த்தும்பறை போன்ற பிரதேச செயலக பிரிவுகள் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...