ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைப்பு!

Date:

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 0-30 அலகு ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுககள் 50 ரூபாயில் இருந்து 30 ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் ‘மின் நிலையத்தில் பாரிய மாற்றத்திற்காக’ சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், முற்றிலும் புதிய மின் நிலையத்துக்கான சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஆதரவு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மற்றும் ஏனையோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...