ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறை பார்த்தல் சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06) பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு), மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய), முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி), காஸிமீய்யாஹ் மத்ரஸா, இஹ்யாவுல் உலூம் மத்ரஸா, அப்துல் மஜித் எகடமி, அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா, தாருல் குர்ஆனுல் கரீம் மத்ரஸா மாணவர்கள், உஸ்தாத்மார்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரை பிறைப்பார்த்து வந்த குழுக்களுடன் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகர கிளையின் உறுப்பினர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை கொழும்பு பெரிய பள்ளிவாசல்  பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷேக் எம். ஆர். அப்துர் ரஹ்மான் ஹிலாலி ஹஸரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...