ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறை பார்த்தல் சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06) பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு), மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய), முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி), காஸிமீய்யாஹ் மத்ரஸா, இஹ்யாவுல் உலூம் மத்ரஸா, அப்துல் மஜித் எகடமி, அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா, தாருல் குர்ஆனுல் கரீம் மத்ரஸா மாணவர்கள், உஸ்தாத்மார்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரை பிறைப்பார்த்து வந்த குழுக்களுடன் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகர கிளையின் உறுப்பினர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை கொழும்பு பெரிய பள்ளிவாசல்  பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷேக் எம். ஆர். அப்துர் ரஹ்மான் ஹிலாலி ஹஸரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...