கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இஸ்ரேல்: ஐ.நாவின் வெட்கக்கேடான தீர்மானம் என நெதன்யாகு விசனம்

Date:

குழந்தைகளுக்கு எதிரான சட்டங்களை மீறும் படைகளின் பட்டியலில் இஸ்ரேல் ராணுவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு குழந்தைகளை பாதுகாக்க தவறிய குற்றவாளிகள் பட்டியலில் இஸ்ரேல் ராணுவமும் இடம் பெற்றுள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டன் அறிவித்துள்ளார்.

இந்த பட்டியல் அடுத்த வாரம் ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும். மோதல்களில் குழந்தைகள் கொல்லப்படுவது, உதவி கிடைக்காதது, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை “ஹமாஸின் அபத்தமான கூற்றுக்களை ஏற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தன்னை வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்த வெட்கக்கேடான தீர்மானத்தால் தான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன்” என் இஸ்ரேலுக்கான ஐக்கிய நாடுகள் சபையிக் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அண்மைய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...