விவசாயத் துறை மேம்பாட்டிற்காக இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் ஓமான் தூதுவருக்கும் இடையில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ விஜயங்கள், ஆய்வுகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விவசாய அமைச்சர் மதிப்பீடு செய்து இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவார் என ஓமான் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...