பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகள் முன்னெடுப்பு!

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன உள்ளிட்ட விகாரைகளில் விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

இதற்காக நாடளாவிய ரீதியாகவும் இருந்து பௌத்தர்கள் குறித்த விகாரைகளுக்கு சென்றுள்ள நிலையில், இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியாகவுள்ள சுமார் 11 ஆயிரம் விகாரைகளில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியாக பல்வேறு இடங்களில் தானசாலைகளும் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

47,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் 700 இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொசன் பொளர்ணமி தினம் நடைபெறும் மிஹிந்தலை, ஸ்ரீ மகாபோதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன ஆகிய விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...