வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்: பொலிஸ் மா அதிபர்

Date:

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினரை ஒடுக்குவதற்கு அவர்களிடமுள்ள துப்பாக்கிகள் பாரிய தடையாக உள்ளமையினால் முப்படையினரின் ஆதரவுடன், அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை கைப்பற்றுமாறும்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யுக்திய நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் யுக்திய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...