பிரித்தானியாவில் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி!

Date:

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது.

பிரித்தானிய  தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.

அதற்கமைய 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் வெற்றியின் பின்னர் மக்களுக்கு மத்தியில் உரையாடிய கீர் ஸ்டார்மர், “நாம் சாதித்துவிட்டோம்” , “மாற்றம் இப்போது தொடங்குகிறது  என குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330-க்கும் அதிகமான இடங்களை வென்றுவிட்டது. மேலும் 160-க்கும் அதிகமான இடங்களுக்கான முடிவுகள் வரவேண்டியுள்ளன.

கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 99 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பிரித்தானியாவில்  ஆட்சி அமைக்க 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய , இதுவரை வெளியான முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி – 391 இடங்களையும்,  கன்சர்வேடிவ்  கட்சி 99 இடங்களையும் , லிபரல் டெமாக்ரடிக் கட்சி 60 இடங்களையும் பிடித்துள்ளன.

இதேவேளை, தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் படுதோல்வி அடைந்துள்ளார் . அத்தோடு, தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...