தேசபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பு

Date:

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பதவி வகிக்கமுடியாது என தெரிவித்து உயர் நீதிமன்றம் இன்று காலை இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உத்தரவிடுமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களும், இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 8 பேரினால்  இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீதியரசர்களான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்களின் பரிசீலிக்கப்பட்டிருந்தன.

பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் சிபாரிசு செய்யப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பு சபையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, அவரை நியமித்த ஜனாதிபதியின் முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...