இஸ்ரேலியப் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமொிக்காவில் போராட்டம்!

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களில்  200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், அமெரிக்க தலைவர்களுடனும் பேசுவார்த்தையில் ஈடுபடுவதற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  நேற்று முன்தினம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீனக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான பலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று முன் தினம் தலைநகர் வொஷிங்டனில் யூனியன் கட்டிடத்தின் முன், பலஸ்தீனிய கொடியை ஏந்தியவாறு, ஊர்வலமாக வந்த பொது மக்கள், நெதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள், நெதன்யாகு செய்வது இனப்படுகொலை என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இஸ்ரேல் பிரதமர்  நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, போராட்டக்கார்கள் மீது அமெரிக்க பொலிஸார் கடுமையான அடக்குமுறையை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்கார்கள், அமெரிக்க கொடியையும், பெஞ்சமின் நெதன்யாகுவின் உருவ பொம்மையையும் எரித்ததுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அமெரிக்க கொடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்  தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 9 மாதங்களாக காசா மீது, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், 39,175 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...