ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டது!

Date:

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரான் வந்திருந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹினியா தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் அமெரிக்கவிலிருந்து வெளியாகின்ற ‘த நியூயோர்க் டைம்ஸ்’ நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.

5 மத்தியக் கிழக்கு அதிகாரிகளையும் ஒரு அமெரிக்க அதிகாரியையும் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படைகளே (IRGC) விடுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கு விஜயம் செய்த பல சந்தர்ப்பங்களிலும் ஹனியாவுக்கு இந்த விடுதியையே தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. புதனன்று இவரது மெய்ப்பாதுகாவலரும் இங்கு தங்கியிருந்த வேளையிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்புக்கூறவோ மறுக்கவோ இல்லை, ஆனாலும் ஈரானிய ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...