ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டது!

Date:

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரான் வந்திருந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹினியா தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் அமெரிக்கவிலிருந்து வெளியாகின்ற ‘த நியூயோர்க் டைம்ஸ்’ நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.

5 மத்தியக் கிழக்கு அதிகாரிகளையும் ஒரு அமெரிக்க அதிகாரியையும் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படைகளே (IRGC) விடுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கு விஜயம் செய்த பல சந்தர்ப்பங்களிலும் ஹனியாவுக்கு இந்த விடுதியையே தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. புதனன்று இவரது மெய்ப்பாதுகாவலரும் இங்கு தங்கியிருந்த வேளையிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்புக்கூறவோ மறுக்கவோ இல்லை, ஆனாலும் ஈரானிய ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...