கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ‘யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்’ தினம் அனுஷ்டிப்பு!

Date:

2019 ஆகஸ்ட் 5ஆம் திகதி காஸ்மீருக்கான சுய நிர்ண உரிமை இந்தியாவினால் பறித்தெடுக்கப்பட்டதை நினைவு கூருகின்ற “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் (காஷ்மீர் சுரண்டல் தினம்) இன்று இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்தானிகராயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் மிகவும் பழமை வாய்ந்த மனி உரிமை பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் தொடர்பான அனைத்து சர்வதேச சட்டங்களும் ஆக்கிரமிப்பு இந்தியாவினால் மீறப்படுவதை இந்நாளில் ஞாபகப்படுத்தப்படுகிறது.

இலங்கைக்கான பாகிஷ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தான் ஜனாதிபதி மேன்ன்மை தாங்கிய ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் முஹம்மமட் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோர் வழங்கிய அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன.

பிரதான உரையை அரசியல் ஆலோசகர் சிராஸ் யூனூஸ் சுரையா ரிஸ்வி மற்றும் பாகிஷ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வணிகத்துறை பொறுப்பாளர் மெஹவிஸ் சமி ஆகியோர் ஆற்றினர்.

இதன்போது’ துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தனது உறுதிமொழிகளை மதிக்க மறுப்பதாலும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காததாலும் இந்த சர்ச்சை இன்னும்  தீர்க்கப்படாமல் உள்ளதாக உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் ஃபஹீம் உல் அஸீஸ் குறிப்பிட்டார்.

மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகை, தகவல் தொடர்பு முற்றுகை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், போலி என்கவுன்டர்கள் மூலம் அப்பாவி காஷ்மீரிகள் மீதான அடக்குமுறை மற்றும் மிருகத்தனமான தாக்குதல் தொடர்பிலும்  உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து காஷ்மீர் தொடர்பான ஆவணப்படமும் புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...