ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

Date:

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பணிகள் இன்று (16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், வேட்பாளர்களின் பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் நேற்றைய தினம் (15) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...