உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு

Date:

உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற Iconic Awards Sri Lanka – 2024 விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டது.

நிறுவனத்துக்கான விருதினை அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE & CAMPUS) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் பெற்றுக்கொண்டார்.

விருதினை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

அமேசான் கல்லூரி நிறுவனமானது 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை சுமார் 15 வருடங்களாக பல கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பல்வேறுபட்ட புலமைப்பரிசில் திட்டங்களை வழங்கி வருகின்றது. வறிய மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Diploma, HND, Degree, Masters, PhD வரையிலான பாட நெறிகளை வழங்கி வருகின்றன.

Business Management, Psychology, Counselling, Teacher Training, Caregiver, Childcare, IELTS, English போன்ற பாடநெறிகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இது வரை 5 விருதுகள் கிடைக்கப்பற்றுள்ளது இது ஆறாவது விருதாக காணப்டுகின்றது.

ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமான முறையில் BMICH இல் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .

இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....