பேருவளையில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு அறிமுக நிகழ்ச்சி!

Date:

‘The ABCs of AI: Shaping Your Future’ என்ற தொனிப்பொருளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஒரு அறிமுக நிகழ்ச்சி பேருவளையில் நடைபெற்றது.

பேருவளை வலய ராபிததுந் நளீமீய்யீன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சி 24 ஆம் திகதி பேருவளை விஸ்டம் கெம்பஸில் இடம்பெற்றது.

காலை 9.30 முதல் நண்பகல் 12.30 வரை நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 24 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

வளவாளராக SLBC முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான அஷ்ஷெய்க் இஸ்பஹான் சாப்தீன் கலந்து கொண்டார்.

சிறப்பான முறையில் அமையப் பெற்ற மேற்படி நிகழ்வில் AI பற்றிய அறிமுகம் உட்பட அதன் கையாளுகை முறைமைகளும் நடைமுறை ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணிக்கக் கல் வியாபாரிகள் என கலந்து கொண்டதோடு, விஸ்டம் கெம்பஸ் உரிமையாளர் அஷ்ஷெய்க் பவ்ஸர், நிகழ்வை ஏற்பாடு செய்த அஷ்ஷெய்க் இஸ்பஹான் பாகிர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...