ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளரான நாச்சோ சான்செஸ் அமோவுடன் 10 முக்கிய பார்வையாளர்கள் இந்த பணியை ஆரம்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 26 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.