அரசியல் மேடையில் ஏறியதன் எதிரொலி: தேசிய சூரா சபை தலைவர் இராஜினாமா

Date:

கொழும்பில் நடைபெற்ற அரசியல் கட்சியொன்றின் பொது மக்கள் சந்திப்பின் போது மேடை ஏறியமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி T.K . அஸூர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் நோக்கில் தான் இப்பதவியை இராஜினாமா செய்வதாக தனது இராஜினாமாக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது.

தேசிய ஷூரா சபையின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அஷ்-ஷேய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி) பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் இதனை அறிவித்துள்ளார்.

தேசிய ஷூரா கவுன்சில் என்பது பல முஸ்லிம் அமைப்புக்களையும் தனி நபர்களையும் உள்ளடக்கிய ஒரு ஆலோசனை அமைப்பாகும், இது இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை செயலூக்கத்துடன் எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.

தேசிய ஷூரா கவுன்சில் (NSC) எடுக்கும் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் அதன் உறுப்பினர்களுடனும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களுடனும் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் எடுக்கப்படுகின்றன.

தேசிய சூரா சபை எந்த வித நேரடி அரசியலிலும் பங்கேற்பதில்லை என்பதன் அடிப்படையிலேயே சட்டத்தரணி அஸூரின் இந்த இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...