உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமையின் ஊடாக அதற்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

அந்த வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாது போகுமென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.

அதேபோன்று 18 வயது பூர்த்தியடைந்த மேலும் சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...