தேர்தலுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மூடப்படும்!

Date:

தேர்தலுக்காக வாக்குப்பதிவு மையங்களாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள், இம்மாதம் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு, முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்” எனவும், அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை பரிசீலித்து, தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு, விடுமுறை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக, கல்வி அமைச்சு இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ.காதிர் கான் )

Popular

More like this
Related

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...