தேர்தல் கடமைக்கு களமிறக்கப்படும் பொலிஸார்

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக 60,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக 54,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6,0000 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக விசேட அதிரடிப்படை சிப்பாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே வவுனியாவில் தேர்தல் கடமைகளுக்காக 1500 காவல்துறையினர் களமிறக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...