தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் உச்சபட்ச அமைதியான சூழலைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக்கொள்வதுடன்,  நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...