தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் உச்சபட்ச அமைதியான சூழலைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக்கொள்வதுடன்,  நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...