எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Date:

காலி மாவட்டம்  எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இம்மாதம்14 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தகுதிபெற்ற தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வாக்களிக்க முடியும் என்பதுடன், குறித்த திகதியில் தமது தபால் மூல வாக்கை அளிக்க முடியாவிடின் எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல் அலுவலகத்தில் வாக்கை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...