இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ள சுவீடன்

Date:

சுவீடன் அரசாங்கம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான சுவீடன் துாதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுவீடன் தூதுவர் Jan Thesleff நேற்று (04) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமைக்கு ஸ்வீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுவீடன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுவர் போஷாக்கு பிரச்சினையை சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதார குறிகாட்டிகளை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கு சவால்கள் இன்னும் காணப்படுவதாக வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...